Posts

விதியின் முடிச்சு

Image
  ” ஆறு .. ஏழு .. ஹ்ம்ம் .. பதினொன்னு .. அப்பா உனக்கு பதினோரு முடி நரச்சி போச்சிப்பா . நீயும் தாத்தா மாதிரி ஆகிடுவியா ?” என்று தோளில் உட்கார்ந்து கொண்டு தகப்பனின் தலையை பீராய்ந்துகொண்டிருந்த மேகலா கேட்டாள் . ” இல்ல .. அப்பாவுக்கு வெள்ளிக்கம்பி வர ஆரம்பிச்சிருக்கு .. அதெல்லாம் எடுத்து முறுக்கி உனக்கு வெள்ளி கொலுசு செஞ்சி போடுவேன் ..” ஹைய்ய் .. அப்போ தாத்தாவுக்கு இருக்க வெள்ளிக்கம்பியெல்லாம் சேர்த்தா வெள்ளியிலயே கொலுசு , ஒட்டியாணம் எல்லாம் போடலாம் போலருக்கே ..”   என்று அவள் கிண்டலடித்ததும் இரண்டு கைப்பட்டைகளையும் பிடித்து கீழே இறக்கி .. " இந்த பாரு .. உனக்கு வெள்ளி கொலுசு வேணுமா ? வேண்டாமா ? என்றான் ராமலிங்கம் . ” வேணும் ... அப்போ அப்பா சொல்றத அப்டியே கேட்டுக்கணும் .. குறுக்க பேசக்கூடாது .. ஹ்ம்ம் ..” என்று கட்டி அணைத்து கன்னத்தில் முத்தமிட்டு மீண்டும் தோளில் தூக்கிக்கொண்டான் . பதினோரு முடி வெள்ளையாகிட்டுன்னா .. நமக்கு வயசாக ஆரம்பிச்சுடுச்சு . இன்னும் பொண்ணுக்கு எதுவும் சேர்க்க துவங்கவில்லையே என்ற சிந்தனை ஓடத்...

வாழ்வின் திறவுகோல் - மரணம்!

Image
இப்போதெல்லாம் திருமண வீடுகளுக்குச் செல்வதிலும், பிறந்தநாள் கொண்டாட்டங்கள் போன்றவற்றிலும் அதிக ஈடுபாடு இல்லை. திருமண வீடுகளும் அரங்கங்களும் போலியான இன்பவியல் நாடகங்களை நடத்திக்கொண்டிருக்கின்றன என்பது மெல்ல புரிய ஆரம்பித்திருக்கிறது.  கல்யாணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிரென்று நடத்தப்படும் திருமணங்கள் மனித வாழ்வின் சந்தோஷத்தின் சாவியாக நம்பப்படுகிறது. ஆனால் உண்மையில் அதற்கு தலைகீழான நிகழ்வுகள் தான் அரங்கேறுகின்றன. திருமண வீடு, பிறந்தநாள், சடங்கு என்றாலே புன்னகையோடும், மன நிறைவோடும் மகிழ்ச்சியோடும் இருக்கவேண்டுமென நமக்கு கட்டளையிடப்பட்டிருக்கிறது. கடன் வாங்கி பெண்ணுக்குத் திருமணம் செய்யும் அப்பாவும், குறை சொல்லி நிகழ்வில் கலந்துகொள்ளும் உறவினர்களும் வலுக்கட்டாயமாக தாமே முன்வந்து மகிழ்ச்சியாக இருக்கும் மன நிலையை உருவாக்கிக்கொள்கின்றனர். அல்லது மகிழ்ச்சியாக இருப்பதுபோல் பாவனை செய்கின்றனர். அதே நேரத்தில் ஒரு மரணம் நிகழ்ந்த வீட்டை பாருங்கள். அங்கே சோகமும், அழுகுரலும், ஆர்ப்பாட்டமும் நிறைந்திருந்தாலும் அவற்றில் போலித்தனம் தென்படுவதில்லை. உண்மை மட்டுமே நிர்வாணமாய் நிற்கிறது. எதிரியே இறந்திர...

அன்னமிட்ட கை

என்னையும் மீறி எனக்கு சில எதிர்மறை எண்ணங்கள் வந்துபோகும். அது பெரும்பாலும் நெருங்கியவர்களின் இறப்பாக இருக்கும். அதுபோன்ற எண்ணங்கள் உதிக்கும்போதெல்லாம் "இல்லை அவ்வாறு நடக்கக் கூடாது" என்று மனதுக்குள் வேண்டிக்கொள்வேன். அப்படி சமீபத்தில் வந்துபோன எதிர்மறை எண்ணம் கார்த்தியின் அம்மா இறந்துவிட்டார் என்ற செய்தி. இந்தத் தகவலை யாரோ எனக்கு தொலைபேசி சொல்வதாக அந்த எண்ணம் தோன்றி மறைந்தது. இல்லை... இது நடக்கக்கூடாது. கார்த்தியின் அம்மாவுக்கு மண்ணுலகைவிட்டுப் பிரியும் வயது கிடையாது என்று உறுதியாய் மனதில் நிலைநிறுத்திக்கொண்டேன். ஆனால், இயற்கையின் விதிக்கு முன்னால் அற்ப மனிதன் நான் என்ன செய்துவிட முடியும்? எல்லாம் முடிந்துவிட்டது. கடந்த ஏழாம் தேதி மாலை நண்பன் ஒருவனிடமிருந்து தொலைபேசி அழைப்பு. "கார்த்தியோட அம்மா இறந்துட்டாங்களாம்டா" என்றான். எனக்குள் தோன்றி மறைந்த அந்த எண்ணம் உண்மையாகிவிட்டிருந்தது. என்ன செய்வதென்று தெரியவில்லை. உடனடியாக கிளம்புகிறேன் என்று அழைப்பைத் துண்டித்துவிட்டு அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு வந்தேன். கார்த்தியும் அழைத்து தகவலைச் சொன்னான். எப்படி ஆச்சு.. ஈவ்னிங் ...

”தலித் அரசியல்” லப்பர் பந்து அடித்த சிக்ஸர்

Image
  சமீபத்தில் லப்பர் பந்து திரைப்படம் தொடர்பான சில எதிர்மறை விமர்சனங்களைப் பார்த்தேன். அதில் அரசியல் தலித்துகளை தியாகிகளாக்கும் வன்முறையை இயக்குனர் செய்திருக்கிறார் என்ற குற்றச்சாட்டுகள் பரவலாக முன்வைக்கப்பட்டுள்ளன. அதாவது, தலித் இளைஞராக வரும் ஹரிஷ் கல்யாண், தாங்கள் தோற்றுப்போனால் அந்த மைதானத்தில் இனிமேல் கிரிக்கெட் ஆடமுடியாது என்று ஒப்பந்தம் போடப்பட்ட பின்னரும் தாங்களாகவே தோற்றுப்போய் தியாக மனப்பான்மையுடன் காட்டிக்கொள்வதுபோல் படம் நிறைவடைவது ஏற்புடையது அல்ல. அந்த போட்டியில் வெற்றிபெறுவதுபோல் காட்சி அமைத்திருந்தால் மட்டுமே, அவர்களின் போராட்டத்திற்கு நியாயம் கிடைத்திருக்கும் எனவும், தியாகிகளாய் இந்த சமூக வரலாற்றில் நிலை நிறுத்தப்பட்டவர்கள் எல்லோருமே போராட முயன்று பின் தியாகி பட்டம் சூட்டப்பட்டவர்கள் என்றும், அந்த அடைப்புக்குள் அரசியல் தலித்துகளை நிறுத்துவதன் மூலம், தலித் அரசியலிலிருந்து மிக லாவகமாக தலித்துகளைப் பிரித்து ஒதுக்கிவைக்கும் வன்முறையை இப்படம் செய்திருக்கிறது என்பதும் அந்த விமர்சனங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள். இந்த விமர்சகர்கள் எந்த புள்ளியில் நின்று தலி...