Posts

அன்னமிட்ட கை

என்னையும் மீறி எனக்கு சில எதிர்மறை எண்ணங்கள் வந்துபோகும். அது பெரும்பாலும் நெருங்கியவர்களின் இறப்பாக இருக்கும். அதுபோன்ற எண்ணங்கள் உதிக்கும்போதெல்லாம் "இல்லை அவ்வாறு நடக்கக் கூடாது" என்று மனதுக்குள் வேண்டிக்கொள்வேன். அப்படி சமீபத்தில் வந்துபோன எதிர்மறை எண்ணம் கார்த்தியின் அம்மா இறந்துவிட்டார் என்ற செய்தி. இந்தத் தகவலை யாரோ எனக்கு தொலைபேசி சொல்வதாக அந்த எண்ணம் தோன்றி மறைந்தது. இல்லை... இது நடக்கக்கூடாது. கார்த்தியின் அம்மாவுக்கு மண்ணுலகைவிட்டுப் பிரியும் வயது கிடையாது என்று உறுதியாய் மனதில் நிலைநிறுத்திக்கொண்டேன். ஆனால், இயற்கையின் விதிக்கு முன்னால் அற்ப மனிதன் நான் என்ன செய்துவிட முடியும்? எல்லாம் முடிந்துவிட்டது. கடந்த ஏழாம் தேதி மாலை நண்பன் ஒருவனிடமிருந்து தொலைபேசி அழைப்பு. "கார்த்தியோட அம்மா இறந்துட்டாங்களாம்டா" என்றான். எனக்குள் தோன்றி மறைந்த அந்த எண்ணம் உண்மையாகிவிட்டிருந்தது. என்ன செய்வதென்று தெரியவில்லை. உடனடியாக கிளம்புகிறேன் என்று அழைப்பைத் துண்டித்துவிட்டு அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு வந்தேன். கார்த்தியும் அழைத்து தகவலைச் சொன்னான். எப்படி ஆச்சு.. ஈவ்னிங் ...

”தலித் அரசியல்” லப்பர் பந்து அடித்த சிக்ஸர்

Image
  சமீபத்தில் லப்பர் பந்து திரைப்படம் தொடர்பான சில எதிர்மறை விமர்சனங்களைப் பார்த்தேன். அதில் அரசியல் தலித்துகளை தியாகிகளாக்கும் வன்முறையை இயக்குனர் செய்திருக்கிறார் என்ற குற்றச்சாட்டுகள் பரவலாக முன்வைக்கப்பட்டுள்ளன. அதாவது, தலித் இளைஞராக வரும் ஹரிஷ் கல்யாண், தாங்கள் தோற்றுப்போனால் அந்த மைதானத்தில் இனிமேல் கிரிக்கெட் ஆடமுடியாது என்று ஒப்பந்தம் போடப்பட்ட பின்னரும் தாங்களாகவே தோற்றுப்போய் தியாக மனப்பான்மையுடன் காட்டிக்கொள்வதுபோல் படம் நிறைவடைவது ஏற்புடையது அல்ல. அந்த போட்டியில் வெற்றிபெறுவதுபோல் காட்சி அமைத்திருந்தால் மட்டுமே, அவர்களின் போராட்டத்திற்கு நியாயம் கிடைத்திருக்கும் எனவும், தியாகிகளாய் இந்த சமூக வரலாற்றில் நிலை நிறுத்தப்பட்டவர்கள் எல்லோருமே போராட முயன்று பின் தியாகி பட்டம் சூட்டப்பட்டவர்கள் என்றும், அந்த அடைப்புக்குள் அரசியல் தலித்துகளை நிறுத்துவதன் மூலம், தலித் அரசியலிலிருந்து மிக லாவகமாக தலித்துகளைப் பிரித்து ஒதுக்கிவைக்கும் வன்முறையை இப்படம் செய்திருக்கிறது என்பதும் அந்த விமர்சனங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள். இந்த விமர்சகர்கள் எந்த புள்ளியில் நின்று தலி...

மாண்புமிகு மாணவன்:-

Image
அகில இந்திய வானொலியில் தேர்வு செய்யப்பட்ட புதிதில் மோகனகிருஷ்ணன் சார் எங்கள் எல்லோரையும் ஒரு குடும்பத்தின் உறுப்பினர்களாகவே பாவிப்பார். கலங்கரைவிளக்கத்துக்கு அருகில் உள்ள தேநீர் கடையில் முப்பது பேர் தேநீர் குடிப்போம். அந்த முப்பது தேநீரையும் அவரேதான் வாங்கித்தருவார். இது ஒரு நாள் இரண்டு நாள் அல்ல.. பல நாட்கள் இப்படித்தான் நடந்திருக்கிறது. அவர் ஒரு பாஸ் என்ற பயமே எங்களுக்கு இருக்காது. அவ்வளவு அன்பானவர், எப்போதும் மரியாதைக்குரியவ ர். ஒவ்வொருவரின் தனித்திறமைகளையும் நுட்பமாக கவனித்து அதை மேம்படுத்த ஊக்கப்படுத்துவார். குறைகளை வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல் கண்டிப்பார். MGM என்று எல்லோராலும் அழைக்கப்படும் அவருக்கு நான் வைத்த செல்லப்பெயர் SPB. அழகாகப் பாடுவார்..அதில் SPB யின் சாயல் இருக்கும். உருவத்திலும் குணத்திலும் SPBஐ ஒத்தவர்தான் அவர். அவருடைய அன்பைப் பற்றி தமிழ்ப்பிரபா ஒருமுறை இப்படி எழுதினான் "சார்.. எனக்கு ரொம்ப கடுப்பா இருக்கு.. உங்கள கத்தியால குத்தி கொலை பண்ண போறேன் சார்" என்று சொன்னால் கூட.. "பாத்துப்பா.. கத்திய ஒழுங்கா பிடி, கையில கிழிச்சிடப்போவுது" என்று அன்ப...

அந்த சட்டை:-

Image
மிகுந்த குழப்பத்தில் திரிந்துகொண்டிருந்தான் மோகன். எங்கே போயிருக்கும்..? அப்படி என்ன நாம் தவறாக சொல்லிவிட்டோம். வழக்கமாக பேசுவதைக் காட்டிலும் கொஞ்சம் ஓவராகிவிட்டது இன்று. அதுக்காக என்னை விட்டு போய்விடுவதா? இப்போ இண்டர்வியூக்கு கிளம்பனுமே?  பரபரப்பில் இருந்த மோகனுக்கு மெட்ரோ நகரத்தின் சத்தங்கள் கூடுதலாக எரிச்சலூட்டின.  எல்லோருக்கும் அவரவர் பயன்படுத்தும் பொருட்களில் சிலவற்றில் மட்டும் ஒரு அலாதியான பிரியம் இருக்கும் அல்லவா? அப்படிப்பட்ட ஒரு சட்டைதான் அது. கல்லூரியில் உடன் படித்த மஞ்சுவின் நினைவாக வைத்திருந்தான். அது ராசியான சட்டையா என்று கேட்டால் அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. ஆனால் அந்த சட்டை அவனுக்கு மிகவும் பிடிக்கும். சிவப்பு நிறத்துணியில் வெள்ளை நிறத்தில் சின்ன சின்னதாய் வெக்டார் குறிகள் இடப்பட்ட டிசைன் அது. வானத்து வின்மீன்கள் அனைத்தும் தன் ரத்ததில் கலந்து தன்னுடனே பயணிப்பது போன்ற உணர்வு அவனுக்கு ஏற்படும். அது மிகவும் பிடித்த சட்டை என்பதால், சென்னைக்கு வந்து நண்பனின் மேன்ஷனில் தங்கி, அவன் சென்ற நான்கைந்து நேர்க்கணல்களுக்கும் அதையே அணிந்து சென்றான். ஆனால் எதிலும் வேலை கிடைக்கவி...

சர்க்கஸ் சிங்கங்கள்:-

Image
ஐபிஎல் துவக்க போட்டியைப் பார்த்துக்கொண்டிருந்தபோது தூக்கம் வந்துவிட்டது. சென்னை அணி பேட்டிங் செய்ய ஆரம்பித்த சில ஓவர்களிலேயே தூங்க போய்விட்டேன். கிரிக்கெட் என்று வரும்போது இரவு பகல் பாராமல் பஞ்சாயத்து டிவி, தூரத்திலிருந்த அண்ணன் வீட்டு டிவி, இன்னும் எங்கெல்லாம் டிவி இருக்கிறதோ அந்த வீட்டு வாசலில் பசியோடு சோற்றுக்காக காத்திருக்கும் நாய் போல எப்போது டிவி போடுவார்கள், கிரிக்கெட் பார்க்கலாம் என காத்துக்கிடந்திருக்கிறேன். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு இந்திய அணி சுற்றுப்பயணம் செய்து விளையாடும்போது நண்பகலில் போட்டி ஆரம்பித்து நள்ளிரவில் முடிப்பார்கள். வீட்டில் மதிய சாப்பாட்டை முடித்துவிட்டு, இரவு முழுக்க கிரிக்கெட் பார்க்க அனுமதிகிடைக்கும் வீடாகத் தேடிச் சென்று உட்காருவோம். கிரிக்கெட் பார்ப்பதில் எந்த அளவுக்கு ஆர்வம் இருந்ததோ அதைவிட அதிகமாக விளையாடுவதிலும் இருந்தது. 300 ரூபாய் கொடுத்து பேட் வாங்குவதெல்லாம் பெருங்கனவு. நன்கு உருளையாக இருக்கும் வேப்பங்கட்டை, ஒதியங்கட்டையை எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக கத்தியால் செதுக்கி அழகான கிரிக்கெட் மட்டையை நானே உருவாக்கி, ப்ரில் சிவப்பு மையின் து...

மாப்பிள்ளை வீரனும் நானும்..!

Image
 மாப்பிள்ளை வீரனும் நானும்..!  இன்று (02-08-2023) மாப்பிள்ளை வீரன் கோவிலுக்குச் சென்றோம். திருவிழா நேரத்தில்தான் அதிகமாக சென்றிருக்கிறேன். திருவிழா இல்லாத நாட்களின் ஊர்த்தெய்வங்கள் அதன் சுய வாழ்க்கை தம் இஷ்டத்திற்கு வாழும் என நினைக்கிறேன். மனிதர்கள் சமூக வலைதளங்களிலிருந்து கொஞ்சம் விலகுவதைப்போல. மாப்பிள்ளை வீரன் அதே மீசை முறுக்குடன் மேற்கு நோக்கி அமர்ந்திருந்தார். மதிய நேரம் என்பதால் திருமேனி அம்மன் இளைப்பாற கதவை சாத்திக்கொண்டது. அதனால் வீட்டு தென்னையிலிருந்து பறித்துக்கொண்டு வந்த தேங்காயை வாசலில் உடைத்து கொடுத்தார் பூசாரி. வீரனுக்கு தேங்காய் உடைத்து, ஆராதனை செய்து வணங்கினோம். கைக்குழந்தையாக இருந்தபோதிலிருந்தே அந்த கோவிலுக்கு போவேன். அம்மாவின் பூர்வீகம் தகட்டூர் என்பதால் ஒவ்வொரு வருடமும் திருவிழாவுக்கு தவறாமல் சென்றுவிடுவோம். ஆனால் திருவிழா இல்லாத ஒரு மதிய நேரத்தில், கூட்டமே இல்லாத கோவிலுக்கு சென்றது மிக நல்ல அனுபவம். நாங்கள் உள்ளே போகும்போது "இந்த வருஷம் புதுசா ரெண்டு மூணு குதிரை வந்திருக்கு.. யாரோ கட்டி வுட்ருக்காங்க" என்று அம்மா சொன்னதும்.. அப்போ மாப்பிள்ளை வீரன் தினமும் ...

இஸ்ரோவின் கதையை ஏன் கேட்க வேண்டும்?

Image
இஸ்ரோவின் கதை ஒரு பார்வை..! ஒரு சிறந்த படைப்பு தனக்கான வாசகர்களையும், ரசிகர்களையும் அதுவே உருவாக்கிக்கொள்ளும் என்பார்கள். அப்படிப்பட்ட ஒரு படைப்புதான் நண்பர் ஹரிஹரசுதன் எழுதியிருக்கும் “இஸ்ரோவின் கதை” புத்தகம். தன்னுடைய முதல் ராக்கெட்டை சைக்கிளில் வைத்து எடுத்து சென்ற இஸ்ரோ.. இன்று அண்டை நாடுகளின் செயற்கை கோள்களை ஏவிக்கொடுக்கும் அளவிற்கு வளர்ந்திருக்கிறதென்றால் அது சாதாரண விஷயம் அல்ல. அதற்காக இந்தியா சிந்திய வியர்வையும் ரத்தமும் மிக அதிகம். துரோகங்களுக்கு மத்தியில் துடிதுடித்து தத்தி தவழ்ந்து எழுந்து நின்று வானூர்தி ஓட்ட கற்றுக்கொண்ட ஒரு குழந்தைபோல் தலை நிமிர்ந்து நிற்கிறது. இந்த வியப்பூட்டும் விண்வெளிப் பாய்ச்சலையும், அதற்கு முதல் புள்ளியிட்டவர்களிலிருந்து முற்றுப்புள்ளி வைக்க சதி செய்தவர்களையும், PSLV, SSLV, Cryogenic என நம்மிடம் இருக்கும் ராக்கெட் தொழில்நுட்பம் மட்டுமல்லாது, இந்திய அணு ஆராய்ச்சி பற்றியும், சந்திராயன், மங்கல்யான், ககன்யான் என இஸ்ரோவின் எதிர்கால திட்டங்களையும் மிக இலகுவாக, ஒரு விறுவிறுப்பான திரைப்படம் பார்த்த உணர்வோடு கடத்துகிறது இந்த புத்தகம். தமிழ் இலக்கிய சூழலில் ...